×

மைத்துனரின் கட்டை விரலை கடித்தவர் கைது

சேலம், மே 4: சேலம் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது சகோதரி தேவிபாலா. அவரது கணவர் வேல்முருகன் (42).தேவிபாலாவுக்கும் கணவர் வேல்முருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் தேவி பாலா, கடந்த சில நாட்களாக குமாரசாமிப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் உள்ளார். நேற்றுமுன்தினம் சமரசம் பேசி மனைவியை அழைத்து செல்வதற்காக வேல்முருகன் மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அங்கிருந்த மைத்துனர் நாகராஜின் கட்டை விரலை வேல்முருகன் கடித்துள்ளார். இதில் படுகாயம் ஏற்பட்ட நாகராஜ், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

The post மைத்துனரின் கட்டை விரலை கடித்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Nagaraj ,Kumaraswamypatti West Street, Salem ,Devibala ,Velmurugan ,Devi Bala ,Kumaraswamypatti ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர்...